Monday, November 9, 2015

எங்கள் பாலினம் ஒடுக்கப்பட்ட பாலினம்

மாண்புமிகு தமிழக மக்களுக்கு,
எங்கள் பாலினம் ஒடுக்கப்பட்ட பாலினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே .எங்களுக்கும் பசி,அன்பு,அழுகை போன்ற உணர்வுகள் உண்டு.நாங்களும் மனிதர்களே.எங்களுக்கு திறமைகள் இருந்தும் பல தளங்களில் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.நாங்கள் திருநங்கையாக பிறந்தது எங்கள் தவறோ??எங்கள் பெற்றோர் தவறோ அல்ல??இயற்கை செய்த பிழை.இப்படி இருக்க நாங்கள் உங்களிடம் வேண்டுவது உங்களைப்போல சக மனிதர்களாக அனைத்து உரிமைகளும் பெற்று கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் .எங்களைப் போன்றோர் பாலியலுக்கும் ,பிச்சை எடுத்தலுக்கும் தள்ள படுகின்றோம் காரணம் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால்.கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு என்னைப்போன்ற படிக்கும் திருநங்கைகள் படிப்பிற்கும் அன்றாட செலவிற்கும் என்ன செய்வார்கள் என்று சற்று சிந்தியுங்கள்??நாங்கள் எங்கள் அடிப்படை உரிமையான கல்வி,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு முறைகளில் ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த அரசு எங்களுக்கான உரிமையை கொடுக்க மறுக்கிறது.நாங்கள் என்ன செய்வது??இந்த அரசு எங்களை பாலியலும் பிச்சை எடுக்கதான் வழியுறுத்துகிறது.ஆனால் என்னைப்போன்று பல திருநங்கைகள் கண்ணியமான வா வாழ நினைக்கின்றனர் எங்களுக்கு பாலியலும் பிச்சை எடுத்தலும் பிடிக்கவில்லை எனவே எந்தவித சமூக பொருளாதார பாதுகாப்பும் இல்லாத இந்நாட்டில் எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை ஆதலால் எங்களை #‪#‎கருணைக்கொலை‬ செய்யுமாறு இந்திய அரசை வழியுறுத்துகிறோம்..தமிழக மக்களாகிய உங்களையும் நாடி வந்துள்ளோம் நீங்களும் எங்களை கருணைக்கொலை செய்ய உங்கள் ஆதரவை தந்து வாழ வழிவிடவில்லை சாவதற்காவது வழிவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

லிவிங் ஸ்மைல் வித்யா
ஏஞ்சல் கிளாடி
மதிப்பிற்குரிய மங்கை பானு

No comments:

Post a Comment