Monday, October 17, 2016

ஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி

 ஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி

ன்று நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கல்வியை இழந்து நல்லதொரு வாழ்க்கையை இழந்து தவிப்புடன் உண்மையான அன்புக்காகவும், மரியாதையான வாழ்க்கைக்காவும் ஏங்குகிறார்கள்.
கடந்த பத்துவருடங்களாக திருநங்கைகளின் ஓலக்குரலை என் எழுத்திலும், கவிதையிலும், திரைப்படத்திலும், ஓவியங்களிலும் ஒலிக்கிறேன்.
ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் மாற்றுப்பாலினர் ஒருசிலர் மட்டுமே கல்விகற்பதை காண்கிறேன். மற்றவர்களெல்லாம் தெருவில் அன்றாட தேவைகளுக்காக இருக்கிறார்கள். சமுதாயத்தின் எத்தனை பெரிய அவலம் இது?
கல்வி மறுக்கப்படும்போது நல்லதொரு சிறப்பான எதிர்காலம் மறுக்கப்படுகிறது.  வீட்டைவிட்டு துரத்தப்படும் அல்லது வெளியேறும் திருநங்கைகளும், திருநம்பிகளும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்காகவே போராடும் போராட்ட வாழ்க்கையில் கல்வி புறந்தள்ளப்படுகிறது.  அந்தக்கல்வியை திருநங்கைகளுக்கு மீண்டும் வழங்க நிதிஆதாரங்கள் தேவை. அரசாங்கம் செய்யும் என்றெல்லாம் காத்திருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
கடவுள் என்னை திருநங்கையாக படைத்து எனக்கு ஏராளமான திறன்களையும் வரங்களாக வழங்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
 எனது ஓவியத்திறனை முழுவதுமாக பயன்படுத்த தொடங்கியுள்ளேன். அது எனக்கு ஒரு தெய்வீக, திவ்ய பயணமாக அனுபவமாக இருக்கிறது.  இன்று எனது ஓவியங்களை விற்று திருநங்கைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதில் வெ
ஓவியப்பணியில் கல்கி
ற்றியும் பெற்று வருகிறேன். 

வரும் நவம்பரில் ஒரு அற்புத மாலைப்பொழுதில் எனது ஓவியங்கள் விற்ற தொகையை கல்வி கற்க விரும்பிய நான் தேர்ந்தெடுத்த என் திருநங்கை சகோதரிகளுக்கு வழங்குவேன்.
நான் ஒரு திருநங்கை என்பதில் எள்ளளவும் எனக்கு குறையில்லை, கவலையுமில்லை. பெற்றவர்களின் அரவணைப்புப்பெறுவது திருநங்கைகளுக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.  அதிலும் அவர்களை பெருமைப்படுத்தும் அளவுக்கு நம் செயல்களையும் வாழ்க்கையையும் உயர்த்தவேண்டும். 
'புறக்கணிப்பு' என்ற கல்கியின் ஓவியம்
என்னைப்போன்றோருக்கு உதவும் கலைத்திறமையுடன் என்னை படைத்திருக்கிறார் என்பதே பெரிய வரம். கல்வியே பெரும் சொத்து, மூலதனம், வாழ்க்கையை மாற்றும் மந்திரச்சாவி. அந்தக்கல்வியை வழங்கும் எனது பணிகளை தொடருவேன்.
எனது ஓவியங்கள் விற்பனைக்குள்ள இணையதளம் காண கிளிக் செய்யுங்கள் www.fueladream.com/home/campaign/278.
எனது வலைத்தளம் காண www.kalkisubramaniam.com

Monday, February 1, 2016

திருநர்களுக்கான கோரிக்கைகள் - பானு

[01/02 9:38 pm] ‪+91 90470 92550‬: Sorry sir. Actually the pictures are meant to send to my friend's mobile for  drawing and printing .  He needed some good photos to make calendars.
Thanks for taking interest in me. I'm a non believer. I apologize if by any means I offended you by posting those pictures. 👍🏾
[01/02 11:49 pm] Oviya: திருநர்களுக்கான_கோரிக்கைகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் கீழ்காணும் கோரிக்கைகளை எந்த கட்சி ஆதரிக்கிறதோ???எந்த கட்சி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ?? அவர்களுக்குதான் எங்களது ஆதரவு..


1.மூன்றாம் பாலினம் என்று எங்களை அடையாள அட்டைகளில் குறிப்பதைத் தவிர்த்து (அல்லது ஒன்றாம்,இரண்டாம் பாலினம் யார் என்ற விளக்கத்தையாவது தரவேண்டும் )திருநர்கள் தாங்கள் விரும்பும் பாலின அடையாளத்துடன் வாழ வழி செய்யவேண்டும்.

2.சாதிச்சான்றிதழ்களைப் போல,மாற்றுத் திறனாளிகளுக்குத் தரும் மருத்துவச்சான்றிதழைப்போல பாலின அடையாளத்தால் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் எங்களுக்கு 'பாலின மாற்றுத்திறனாளிகள் '(Genderly challenged)எனும் மருத்துவச் சான்றிதழ்,அரசால் அனுமதிக்கப்பட்ட மருத்துவரால் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இச்சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு திருநர்களுக்கு வேலை மற்றும் உயர்கல்வியில் 1% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட வேண்டும் .இந்த இடஒதுக்கீடு சாதியப் படிநிலையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

3.அனைத்துக் கல்விச் சான்றிதழ்களிலும் ,தமது புதிய பெயர் மற்றும் விரும்பிய பாலினத்தை மாற்றக்கூடிய வகையில் ஆவன செய்யவேண்டும்.

4.68ஆண்டுகளாக திருநர்களுக்கு மறுக்கப்பட்ட சமூக,பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக மாநிலம்தோறும் குறைந்தபட்சம் 100திருநர்களுக்கு அவரவர் தகுதிகேற்ப அரசுக் காலிப்பணியிடங்களில் உடனடியாக நேரடிப் பணிநியமனம் செய்ய வேண்டும்.

5.அனைத்து பள்ளிகளும் பாலினம் உறுதிசெய்யப்படாத குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலைத்தருவதாக இருக்க வேண்டும்.அதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையில் பாலினம் உறுதிசெய்யப்படாத குழந்தைகளின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

6.பாலினம் உறுதி செய்யப்படாத குழந்தைகளை அடையாளம் கண்டு பள்ளி நிர்வாகம் அக்குழந்தைக்கும் அக்குழந்தையின் பெற்றோருக்கும் மருத்துவ அலோசனை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

7.பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய திருநர்கள்  தமது தற்போதைய பெயர் மற்றும் பாலின அடையாளத்துடன் தொடர்ந்து படிக்க ஆவண செய்ய வேண்டும்.


8.வேலை மற்றும் மேற்படிப்புகளில் திருநர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும்.

9.பெற்றோர்களின் ஆதரவின்றி மேற்படிப்பைத் தொடரும் திருநர்களுக்கு இலவசக்கல்வியும் ,மாதந்தோறும் ரூ5000 ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.

10.எட்டாம் வகுப்பு முதல் அனைத்து பாடத்திட்டத்திலும் ,மொழி,அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருநர்கள் குறித்து தெளிவான பாடங்கள் இருக்க வேண்டும்.


11.திருநர்களுக்கு எதிராக  பணியிடங்களில் நிகழ்த்தப்படும் பாகுபாடு/புறக்கணிப்பு/வன்முறைகளை தவிர்க்கும் முறையான பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

12.பால்மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திருநர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க பட வேண்டும் .


13.பள்ளி,கல்லூரி,பணியிடங்களில் தனிநபர் பயன்பாட்டு கழிவறை இருக்க வேண்டும் .


14.அனைத்து திருநர்களுக்கும் நகரங்களுக்கு உள்ளேயே இலவச வீடு அமைத்து தர வேண்டும்.


15.திருநர்களின் பிரச்சனையை மாநிலங்களவையிலும்,மக்களவையிலும் எடுத்துரைக்க ஒரு இருக்கை ஒதுக்கப் படவேண்டும்.

16.அரசியலில் திருநர்கள் பங்குகொள்ளும் வகையில்  (recerved area) பதிவு செய்யப்படும் தொகுதியை போல் அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படவேண்டும் அத்தொகுதியில் திருநர் வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் .



கோரிக்கை பரிந்துரையாளர்கள்

கிரேஸ் பானு
லிவிங் ஸ்மைல் வித்யா
ஏஞ்சல் கிளாடி