Monday, November 16, 2015

பரதநாட்டிய நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நடனம் ஜப்பான் நாட்டில்


               
                                                                                                               

    "கொஞ்சும் தமிழில் தஞ்சை நடனம்"
                                                                             
                       உலகப் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நடனம் முதன்முறையாக
ஜப்பான் நாட்டில் ஒசாகா மாநிலத்தில் நிகழ உள்ளது.புகழ்பெற்ற  Osaka Museum of Ethnology  யின் சிறப்பு அழைப்பினில் 'கொஞ்சும் தமிழில் தஞ்சை நடனம்' எனும் தலைப்பினில் நர்த்தகி தனது நடன நிகழ்ச்சியினை வழங்க உள்ளார்.இதில் தன் தாய்நாடான இந்தியாவின் கலாச்சாரத்தையும்,தன்  தாய்மொழியான தமிழின் பண்பாட்டுச் சிறப்பினையும் விவரிக்கும் வகையில் தனது நடன நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளார்.அவரது இசைக்குழுவினர் என ஆறு கலைஞர்களும் உடன் செல்கின்றனர்.

நவம்பர் 22 ,2015 திங்கட்கிழமை மதியம் நடன நிகழ்ச்சியும்,23 நவம்பர் நண்பகல் பயிற்சிப்பட்டறையும் இடம்பெற உள்ளது.
அழைப்பிதழையும், நர்த்தகி பற்றிய மேலதிக விபரங்களையும் இங்கு இணைத்துள்ளோம்.
     
                                                                                    "எங்களது மகத்தான வெற்றிக்கு துணை நிற்கும் உங்கள் அனைவரிடமும்
                                                                                     இதனை பகிர்வதில் மகிழ்கின்றோம்."
என்றும் உங்களுடன்,
வெள்ளியம்பலம் அறக்கட்டளை
நடனக் கலைக்கூட உறுப்பினர் மற்றும் மாணவியர்.

www.narthakinataraj.com

No comments:

Post a Comment