Monday, February 1, 2016

திருநர்களுக்கான கோரிக்கைகள் - பானு

[01/02 9:38 pm] ‪+91 90470 92550‬: Sorry sir. Actually the pictures are meant to send to my friend's mobile for  drawing and printing .  He needed some good photos to make calendars.
Thanks for taking interest in me. I'm a non believer. I apologize if by any means I offended you by posting those pictures. 👍🏾
[01/02 11:49 pm] Oviya: திருநர்களுக்கான_கோரிக்கைகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் கீழ்காணும் கோரிக்கைகளை எந்த கட்சி ஆதரிக்கிறதோ???எந்த கட்சி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ?? அவர்களுக்குதான் எங்களது ஆதரவு..


1.மூன்றாம் பாலினம் என்று எங்களை அடையாள அட்டைகளில் குறிப்பதைத் தவிர்த்து (அல்லது ஒன்றாம்,இரண்டாம் பாலினம் யார் என்ற விளக்கத்தையாவது தரவேண்டும் )திருநர்கள் தாங்கள் விரும்பும் பாலின அடையாளத்துடன் வாழ வழி செய்யவேண்டும்.

2.சாதிச்சான்றிதழ்களைப் போல,மாற்றுத் திறனாளிகளுக்குத் தரும் மருத்துவச்சான்றிதழைப்போல பாலின அடையாளத்தால் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் எங்களுக்கு 'பாலின மாற்றுத்திறனாளிகள் '(Genderly challenged)எனும் மருத்துவச் சான்றிதழ்,அரசால் அனுமதிக்கப்பட்ட மருத்துவரால் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இச்சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு திருநர்களுக்கு வேலை மற்றும் உயர்கல்வியில் 1% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட வேண்டும் .இந்த இடஒதுக்கீடு சாதியப் படிநிலையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

3.அனைத்துக் கல்விச் சான்றிதழ்களிலும் ,தமது புதிய பெயர் மற்றும் விரும்பிய பாலினத்தை மாற்றக்கூடிய வகையில் ஆவன செய்யவேண்டும்.

4.68ஆண்டுகளாக திருநர்களுக்கு மறுக்கப்பட்ட சமூக,பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக மாநிலம்தோறும் குறைந்தபட்சம் 100திருநர்களுக்கு அவரவர் தகுதிகேற்ப அரசுக் காலிப்பணியிடங்களில் உடனடியாக நேரடிப் பணிநியமனம் செய்ய வேண்டும்.

5.அனைத்து பள்ளிகளும் பாலினம் உறுதிசெய்யப்படாத குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலைத்தருவதாக இருக்க வேண்டும்.அதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையில் பாலினம் உறுதிசெய்யப்படாத குழந்தைகளின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

6.பாலினம் உறுதி செய்யப்படாத குழந்தைகளை அடையாளம் கண்டு பள்ளி நிர்வாகம் அக்குழந்தைக்கும் அக்குழந்தையின் பெற்றோருக்கும் மருத்துவ அலோசனை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

7.பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய திருநர்கள்  தமது தற்போதைய பெயர் மற்றும் பாலின அடையாளத்துடன் தொடர்ந்து படிக்க ஆவண செய்ய வேண்டும்.


8.வேலை மற்றும் மேற்படிப்புகளில் திருநர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும்.

9.பெற்றோர்களின் ஆதரவின்றி மேற்படிப்பைத் தொடரும் திருநர்களுக்கு இலவசக்கல்வியும் ,மாதந்தோறும் ரூ5000 ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.

10.எட்டாம் வகுப்பு முதல் அனைத்து பாடத்திட்டத்திலும் ,மொழி,அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருநர்கள் குறித்து தெளிவான பாடங்கள் இருக்க வேண்டும்.


11.திருநர்களுக்கு எதிராக  பணியிடங்களில் நிகழ்த்தப்படும் பாகுபாடு/புறக்கணிப்பு/வன்முறைகளை தவிர்க்கும் முறையான பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

12.பால்மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திருநர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க பட வேண்டும் .


13.பள்ளி,கல்லூரி,பணியிடங்களில் தனிநபர் பயன்பாட்டு கழிவறை இருக்க வேண்டும் .


14.அனைத்து திருநர்களுக்கும் நகரங்களுக்கு உள்ளேயே இலவச வீடு அமைத்து தர வேண்டும்.


15.திருநர்களின் பிரச்சனையை மாநிலங்களவையிலும்,மக்களவையிலும் எடுத்துரைக்க ஒரு இருக்கை ஒதுக்கப் படவேண்டும்.

16.அரசியலில் திருநர்கள் பங்குகொள்ளும் வகையில்  (recerved area) பதிவு செய்யப்படும் தொகுதியை போல் அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படவேண்டும் அத்தொகுதியில் திருநர் வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் .



கோரிக்கை பரிந்துரையாளர்கள்

கிரேஸ் பானு
லிவிங் ஸ்மைல் வித்யா
ஏஞ்சல் கிளாடி