Wednesday, November 11, 2015

விஜய் தொலைக்காட்சியின் தொடரும் அயோக்கியத் தனங்கள். - பிரியாபாபு

கோபிநாத்தும் ஆண்டனியும் இந்த இழிநிலை விளையாட்டுக்களை நிறுத்த வேண்டும். 

பிரியா பாபுவின் முகநூலிலிருந்து.....


அன்பு தோழமைகளுக்கு,
நேற்று முன் தினம் விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா?வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நீண்ட வற்புறுத்தலாலும் தோழிகள் என் வருகையை விரும்பியதாலும் நிகழ்வில் கலந்துக்கொண்டேன். ஆனால் தற்போது அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதை குறித்து வெட்கப்படுகிறேன், .என் வாழ்வில் கலந்துக்கொண்ட மோசமான நிகழ்வாக இதை கருதுகிறேன் இந்நிகழ்வினாலும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களாலும் காயம்பட்ட ,மனஉளைச்சலுக்கு ஆளான என் திருநங்கைகள் தோழிகள் மற்றும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுகின்ற சில தோழமைகளிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.



ஆம் பலத்திருநங்கைகளை மாவட்டத்தின் பலப்பகுதிகளிலிருந்தும் நிகழ்வில் பங்கேற்க வரச்செய்துவிட்டு துளி கூட மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்பியதையும்,ஒரு திருநங்கை தோழியை நிகழ்வில் அமரவைத்துவிட்டு கீழே இறக்கியதையும்,நடன பள்ளி நடத்தும் ஒரு தோழியின் பள்ளியிலிருந்து சில சிறுமிகளை வரச்செய்துவிட்டு நிகழ்வில் அவர்களை பங்கேற்க்காமல் செய்தது என திரைமறைவில் நிகழ்ந்த பல சம்பவங்களை கேட்டு அதிர்ந்துப போனேன்.ஒரு தோழி தான் அவமானப்படுத்தப்பட்ட விதத்தை நேற்று தொலைப்பேசியில் பேசுகையில், தன் வாழ்க்கையில் இதுவரை இப்படி அவமானப்படுத்தப்படுத்தப்பட்டதில்லை என கதறி அழுதார்.அவர் தான் குடும்பம் ஏற்றுக்கொண்ட கதையை சமூகத்தின் முன்னால் விளக்க தன் சகோதரியையும் அழைத்து வந்திருந்தார் இன்னோரு தோழியோ அழுகையை அடக்கிக்கொண்டு பேச முடியாமல் வார்த்தைகள் சிக்கித்தவித்தன.நிகழ்வில் கலந்துக்கொண்டச் சிலத் திருநங்கைகளும் தங்களின் வாழ்வையோ ,வலிகளையோ இந்நிகழ்வு சரியாக பதிவு செய்யவில்லை என குமுறினர். நானும் அதைத்தான் நினைக்கிறேன்.இப்படி தெரிந்திருந்தால் கண்டிப்பாக நிகழ்வில் கலந்துக்கொண்டிருக்க மாட்டேன்.
ஏற்கனவே ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட, திருநங்கைகளின் கண்ணீரில் காசு பண்ண நினைக்கும், இதுபோன்ற நிகழ்ச்சி ஒருங்கணைப்பாளர்களே .........!!! வேண்டாம் எங்கள் உணர்வுகளோடு ஒரு விளையாட்டு ...
------------------------------------------------------------------------
விஜய் டிவியா ? இல்லை வியாபார டிவியா?
திருநங்கைகளின் கண்ணீரிலா நீ ... காசு பண்ணனும்,
நேற்று முன் தினம் திருநங்கைகள் குறித்து நீயா? நானா நிகழ்வின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நானும், என் சகோதரியுடன் சென்றேன்.நான் குடும்பம் ஏற்றுக்கொண்டு வாழும் திருநங்கை.உண்மையிலே அதிர்ந்துப்போனேன். என்னை நிகழ்வில் உட்கார வைத்துவிட்டு காரணம் சொல்லாமல் இறக்கிவிட்டார்கள்.அத்தோடு நிகழ்வில் ஒவ்வோரு திருநங்கையும் தன் வலி மிகுந்த வாழ்வை பதிவு செய்கையில் நிகழ்ச்சிக்கு பின் அரங்கில் நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் அமர்ந்துக்கொண்டு எங்கள் உணர்வுகளை சொல்லமுடியாத வார்த்தைகளால் கேலிகிண்டல் செய்துக்கொண்டிருந்தார்கள். எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் முக்கிய ஒரு பெண் பிரபலத்தை எங்கள் சார்பாக பேச வரச்சொல்லிவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள் .குறைந்தபட்ச சாரி கூட கேட்க அவர்கள் மீடியாபலமும்,ஆள் பலமும் தடுக்குதோ?. எத்தனை திருநங்கைகளை மாநிலத்தின் பலப்பகுதிகளிலிருந்து வரச்செய்துவிட்டு செலவுக்கும் கூட காசு கொடுக்காத அவலம். எங்கள் துயரங்களை உலகுக்கு சொல்லுகிறோம் என்ற விளம்பரத்துடன் எடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் இத்தகைய செயல்பாடுகள் இவர்கள் உண்மையில் படித்தவர்கள் தானா? பண்பாளர்கள் தான? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.ஒரு புறம் எங்களை கொச்சை படுத்தியது போல் எல்லா நிகழ்வுகளிலும் இப்படிதான் நடந்திருப்பார்கள் போல?.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தொகுப்பாளர் ,ஒருங்கிணைப்பாளர் தேவையா? வெட்கககேடு.நிகழ்வில் கலந்துக்கொண்ட பலத் திருநங்கைகள் சொல்லமுடியாத காயங்களுடன்தான் உள்ளார்கள் எங்கள் குமுறல்கள் கண்டிப்பாக உங்களை தண்டிக்கும். -
பிரியாபாபு-
 
http://www.piraththiyaal.com/2014/06/blog-post.html#more

No comments:

Post a Comment