Wednesday, October 14, 2015

திருநங்கை ! ----- முனைவென்றி நா சுரேஷ்குமார்

 
 

திருநங்கை !

thirunangai, kavithai,  திருநங்கை
திருநங்கை
ஆண் தேவதைகள்
நாங்கள்!
ஒருபாதி ஆணாய்
ஒருபாதி பெண்ணாய்
அர்த்தநாரிஸ்வரர்கள் நாங்கள்!
கருப்பை இல்லாத
பெண்கள்
நாங்கள்!
இயற்கையின் படைப்பில்
முரண்பாடுகள்
நாங்கள்!
வண்டுகள் தேன்பருகாத
மலர்கள்
நாங்கள்!
தோகையுள்ள
பெண்மயில்கள்
நாங்கள்!
எங்குபோனாலும்
அங்கீகாரம் பெறமுடியாத
அனாதைகள்
நாங்கள்!
XX  குரோமோசோம்களால்
பிறப்பது ஆண்!
XY குரோமோசோம்களால்
பிறப்பது பெண்!
X,Y குரோமோசோம்களின்
குளறுபடியால்
எங்களுக்குப் பெயர்
திருநங்கைகள்!!

முனைவென்றி நா சுரேஷ்குமார்

http://moonramkonam.com

No comments:

Post a Comment